How to stop mother feeding in tamil
குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் அந்தத் தருணம்தான், ஒவ்வொரு பெண்ணும் தன்னுள் இருக்கும் தாய்மையை முழுவதுமாக உணர்கிறாள். குழந்தை பிறந்தவுடன் தாயின் உடலில் சுரக்க ஆரம்பிக்கும் தாய்ப்பால் என்னும் உயிர் உணவு, அந்தக் குழந்தைக்கு எதிர்ப்பு சக்தியை அளித்து, ஆரோக்கியத்துக்கும் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது. தாய்ப்பால் தானே சுரக்க ஆரம்பித்ததுபோல தானே சுரப்பை நிறுத்திக்கொள்வதில்லை. குழந்தை பிறந்த ஒரு வருடத்துக்குப் பின்போ, சில காலம் கழித்தோ, திட உணவுகளைக் குழந்தை உண்ண ஆரம்பிக்கும். அந்த நேரத்தில், தாய்ப்பால் சுரப்பை நிறுத்துவது, ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும் சவால். அந்தச் சாவலை எதிர்கொள்வதற்கான அடிப்படை விஷயங்களைச் சொல்கிறார், மகப்பேறு நல மருத்துவர் ஆனந்த் பிரியா.
குழந்தை பிறந்ததும் தாய்மார்களின் உடலில் புரோலாக்டின் (Prolactin) என்கிற ஹார்மோன் தானாகவே சுரக்க ஆரம்பிக்கும். இதுதான் பால் சுரப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம். குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் பெண் உடலில் சுரக்கும் முதல் பாலான, சீம்பாலை குழந்தைக்குக் கொடுக்க வேண்டும். இதுதான் குழந்தைக்கு எதிர்ப்பு சக்தியை தரவல்லது. சில தாய்மார்கள் பால் ஊறவில்லை என்று கூறுவது உண்டு. இதற்கு வாய்ப்பே இல்லை. தாயின் மார்புக்காம்பில் குழந்
how to stop mother feeding in tamil
how to stop mother feeding
how to avoid mother feeding